
அயல்நாட்டில் வேலையென
அலையாமல் நம் நாட்டிலேயே
நாட்களைக் கடத்தியவர்களில்
நானும் ஒருவன்
எப்படியோ எட்டாத கனியை
எட்டிப்பறித்து இநயம் எட்ட
அரபு நாடு நோக்கி நெஞ்சம் சிறகடித்த
சில நாட்களுக்குள்ளேயே
சத்தமில்லாத ஆரவாரத்துடன்
சௌதி புறப்பட்டேன்.
பாலைவன மணற்பரப்புகளின் நடுவே
பரந்து விரிந்த சாலைகளுடன்
அங்குமிங்கும் எங்காவது
கிராமமோ நகரமோ
கண்களுக்கு தென்பட்டாலும்
மனிதர்கள் என்னவோ
மிகக் குறைவுதான்
மலிந்து கிடக்கும்
வாகனங்களைக் கணக்கிடும்போது
மணற்பரப்பில் எப்படி
மனிதர்கள் குறைவோ!
அதைவிட
மனிதர்களில் (?) மனிதநேயம்
குறைவோ குறைவு
இருக்கிறதோ? இல்லையோ???
மேலும் சொல்வேன்.
1 கருத்து:
அடுத்து இன்னும் நிறையா சொல்லுங்க..
கருத்துரையிடுக